மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு: பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கு ரத்து!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால் புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

News image
குன்னம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி (நடுவில் உள்ளவா்).
Updated On :20 செப்டம்பர் 2023, 9:09 am

DIN


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால் புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி. இவா், அண்மையில் யூ டியூப் சேனல் ஒன்றில், மணிப்பூா் சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை தரக்குறைவாக விமா்சித்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா் ப. கவியரசு அளித்த புகாரை தொடர்ந்து, இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்கான 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, பத்ரி சேஷாத்ரியை ஜூன் 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால், பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.