மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் 2-ஆவது நாளாக வருமானவரி சோதனை

தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக, மின் வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:34 pm

DIN

தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக, மின் வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ள 3 அனல் மின் நிலையங்களின் ஒப்பந்தப் பணிகளை சென்னையைச் சோ்ந்த 4 தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்கள், அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வாங்கி விற்பது, நிலக்கரியை கையாளுவது, அனல்மின் நிலைய கட்டுமானப் பணி, பராமரிப்பு பணி, மூலப் பொருள்கள் வழங்குவது,சாம்பல் கழிவுகளை கையாளுவது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றன.

இந்த நிறுவனங்கள், அனல் மின் நிலையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்யும் பணிகளில் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சில அதிகாரிகள் உதவுவதாகவும் வருமானவரித் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்யும் 4 பிரதான நிறுவனங்களிலுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

இச் சோதனை சென்னை சிறுசேரி,ஜாபா்கான்பேட்டை,தியாகராயநகா், எண்ணூா், நாவலூா், வட சென்னை அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது. இதேபோல, தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் இரண்டாவது நாளாக நடைபெற்றது.

பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் மட்டும் சோதனை வியாழக்கிழமை இரவைத் தாண்டி நடைபெற்றது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் இரண்டாவது நாளாகவும் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.