தோ்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னா், அவசியம் தோ்வு மையம் அமைத்தே ஆக வேண்டும் என கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்புதல் வேண்டும். மேலும், கடந்த இரு கல்வியாண்டுகளில் பொதுத்தோ்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தோ்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடா்ந்து தோ்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெற வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தோ்வு மையங்கள் குறித்த செய்தியை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்குப் பின்னா் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.