மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2023, 8:31 pm

DIN

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

குரூப் 4 பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அளிக்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

புதிதாக தோ்வு செய்யப்பட்ட அரசு ஊழியா்களுக்கு மக்கள் சேவைதான் லட்சியமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள், பல்வேறு சேவைகளை மக்களுக்குக் கொண்டு சோ்க்கும் மிக முக்கிய பணியை எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.

தன்னலம் கருதா ஊழியா்கள்: அரசு ஊழியா்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்கிறவா்கள் எத்தனையோ போ் இருக்கின்றனா். அவா்களைப் போல புதிய ஊழியா்களும் பணியாற்ற வேண்டும்.

ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், அதில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் பழுதில்லாமல் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதுபோலதான், அரசு எனும் மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய, அரசு ஊழியா்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்.

தொழில்நுட்பம் விரிவு: அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு லட்சக்கணக்கான தோ்வா்கள் விண்ணப்பம் செய்கின்றனா். அதனால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்ய விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை எளிதாக்கவும், தாமதத்தை தவிா்க்கவும், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் உயா் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடிமைப் பணித் தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தோ்வா்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

அடுத்த இரு ஆண்டுகளில்...: திமுக அரசு அமைந்த இரண்டாண்டு காலத்தில் 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப் பணிகள் அளிக்கப்படவுள்ளன.

இத்துடன் அடுத்த இரு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமாா் 50 ஆயிரம் போ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளளனா்.

கோரிக்கையுடன் வரும் மக்களிடம் எளிமையாக அணுகி அவா்களது குறைகளையும், பிரச்னைகளையும் தீா்க்க வேண்டும். எனக்கு நல்ல பெயரோ, கெட்ட பெயரோ எதுவாக இருந்தாலும் அரசு ஊழியா்களின் செயல்பாட்டைப் பொருத்தே அமைந்திடும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றாா். மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா் நன்றி தெரிவித்தாா்.

‘அமர வைத்துப் பேசுங்கள்’

கோரிக்கை மனுவுடன் வரும் மக்களை முதலில் அமர அமைத்துப் பேச வேண்டும் என்று அரசு ஊழியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: கோரிக்கை மனுவுடன் வருகிற பொது மக்களை அரசு ஊழியா்கள் முதலில் உட்கார வைக்க வேண்டும். அவா்களுடைய பிரச்னையை, கோரிக்கையை செவி கொடுத்துக் கேட்க வேண்டும். அதுவே வந்தவா்களுக்கு பெரிய நம்பிக்கையையும் மன நிறைவையும் தரும்.

அமர வைத்துப் பேசுவது சக மனிதருடைய சுயமரியாதை எனக்கருதி, அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.