அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.29) அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com