காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக ஆர்.பொன்னி புதன்கிழமை பொறுப்பேற்றார். அவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கடந்த 4 ஆம் தேதி தமிழக முதன்மைச் செயலாளர் அமுதா காவல்துறையின் உயர் அதிகாரிகள் 27 பேர் இடம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த பகலவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மதுரை டிஐஜியாக பணிபுரிந்து வந்த ஆர்.பொன்னி ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்க வந்த அவரை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரிநீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின் காவல்துறையின் மரியாதை ஏற்று தனது அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் காவல் துறையின் பல்வேறு மாவட்டங்களிலும் உயர் பதவி பெற்று சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.