தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் ஆட்சியர்களுடன், தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆணையர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரவருணி ஆற்றில் ஒருலட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும், மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்ட பிறகு, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருவதை அறிந்து காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ
குடும்பத் தகராறில் கணவன் குத்திக் கொலை: மனைவி கைது
56 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பி.எஸ் குமாரசாமி ராஜா பிறந்த நாள் விழா
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



