ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.  

News image

கோப்புப் படம்.

Updated On :18 டிசம்பர் 2023, 3:49 pm

DIN

பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.  

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களையும், தற்போது நெல்லை உள்பட தென் மாவட்டங்களையும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.  

இந்த நிலையில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். அப்போது மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பகல் 12.00 மணிக்கு சந்திக்க நேரம் கோரிய நிலையில் இரபு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.