விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்படும்: தேமுதிக

சென்னை தீவுத்தீடலில்  விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்படும்: தேமுதிக

தீவுத்தீடலில்  விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை  அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் விஜயகாந்த்தின் உடல் நாளை (டிச. 29) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com