அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!

ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
Published on


ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
  
ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,  அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சென்றிருந்த அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com