எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 ஜனவரி 2023, 6:45 am

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை  எழுந்தது. அதேபோன்று பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இதனால் ஆளுநரின் பொங்கல் விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஆளுநர் இன்று விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழக ஆளுநர் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.