சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழாவானது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்ச்சவம் கடந்த வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், பத்தாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது.
முன்னதாக தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகளையும் வலம் வந்தது. தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழை எச்சரிக்கை!
அப்பொழுது தேருக்கு முன்பு சிவன், பார்வதி, காளி, அம்மன் உள்ளிட்ட வேடமணிந்த கலைஞர்கள் மேல தாளங்கள் முழங்க நடனம் ஆடினர். சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் குறித்த கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில்! | Election | Rajini
கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி

கேதார்நாத் கோயில் நடை திறப்பு எப்போது?

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


