வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60!

தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜூன் 2023, 4:52 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வரையில் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, சென்னை போன்ற பெருநகரங்களில் திங்கள்கிழமை ரூ.90 முதல் ரூ.100-ஐ தொட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்த காரணத்தாலேயே விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, நாளொன்றுக்கு 60 லாரிகளில் தக்காளி வந்த நிலையில், இப்போது 42 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, தக்காளி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலையில் தக்காளி விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 62 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கத்தைவிட 15 சதவீதம் தக்காளி கூடுதலாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், சில்லரை வியாபாரக் கடைகளில் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.