எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

என்னது.. தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? - அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சி!

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கினை மார்ச் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2023, 10:18 am

DIN

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கினை மார்ச் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் கொண்ட அமா்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. 

அப்போது, தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

மேலும், 'பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம். எனினும் முழுமையாக அனைத்து இடங்களிலும் பேரணிக்குத் தடை விதிக்கவில்லை, பிரச்னை உள்ள இடங்களில் மட்டும் தடை விதித்துள்ளோம்' என்றார்.  பிரச்னை உள்ள இடங்கள் குறித்து உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்த போதும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் நாளை மறுநாள்(மார்ச் 5 ) நடக்கவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.