சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாறு நெடுக நிறைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு
மற்றும் வன்முறைச் செயல்கள் என்பது மனித இனத்தின் மீது படிந்துள்ள அழியாக்களங்கம்.
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான
உலக நாளான இன்று, சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புரீதியான
ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவும், அரசியல்சட்ட விழுமியங்களின் வழியில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியேற்போம் எனப் பதிவிட்டுள்ளார்.