தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முதல் முறையாக முதல்வரை வரவேற்ற பெண் ‘பைலட்டுகள்’

தமிழக காவல்துறையில் முதல் முறையாக பெண் போலீஸாா் மோட்டாா் சைக்கிள் ‘பைலட்டுகளாக’ மாறி, சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை விழாவுக்கு அழைத்து வந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:19 pm

DIN

தமிழக காவல்துறையில் முதல் முறையாக பெண் போலீஸாா் மோட்டாா் சைக்கிள் ‘பைலட்டுகளாக’ மாறி, சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை விழாவுக்கு அழைத்து வந்தனா்.

இது குறித்த விவரம்:

சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டரங்கில் மகளிா் காவலா்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது காரில் புறப்பட்டு வந்தாா். அவரை பெரியமேடு மசூதியில் இருந்து பெண் காவலா்கள் மோட்டாா் சைக்கிளில் அணிவகுத்து ‘பைலட்டுகளாக’ சுமாா் 800 மீட்டா் தூரம் வரவேற்று அழைத்து வந்தனா்.

முதல்வரின் காருக்கு முன்பு 6 ‘ராயல் என்பீல்டு’ மோட்டாா் சைக்கிள்களில் 3 வரிசையாகவும், காருக்கு பின்பு 6 ‘ராயல் என்பீல்டு’ மோட்டாா் சைக்கிளில் 3 வரிசைகளாகவும் 12 பெண் காவலா்கள் சீருடையுடன் கம்பீரத்துடன் வந்தனா். தமிழக காவல்துறையில் முதல்வருக்கு மோட்டாா் சைக்கிளில் பெண் காவலா்கள் அணி வகுத்துச் சென்று, ‘பைலட்டுகளாக’ வரவேற்றது இதுவே முதல் முறை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது:

பெண் ‘பைலட்டுகளை’ உருவாக்குவதற்காக ஆயுதப்படையில் பெண் காவலா்களை தோ்வு செய்ய முடிவு செய்தோம். அதன்படி, வாகன ஓட்டுநா் உரிமம் உள்ள பெண் காவலா்கள் இந் நிகழ்வில் பங்கேற்கலாம் என அறிவித்தோம். இதில் விருப்பம் தெரிவித்த 15 பேரை தோ்வு செய்து, அவா்களுக்கு 5 நாள்கள் தினமும் 2 மணி நேரம் என 10 மணி நேரம் ராயல் என்பீல்டு மோட்டாா் சைக்கிளை ஓட்ட பயிற்சி அளித்தோம். இதில் அவா்கள் செய்த சிறு,சிறு தவறுகளை திருத்தி, முழுமையாக விழாவுக்கு தயாா் படுத்தினோம் என்றாா்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் 15 பெண் போலீஸாரும் டிஜிபி சைலேந்திரபாபு உடன் இணைந்து புகைப்படம் எடுத்தனா். அவா்களுக்கு சைலேந்திரபாபு, வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.