எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தஞ்சை ஆட்சியருக்கு  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் அருகே  அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆ

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:43 am IST


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே  அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை அறிக்கையை ஒருவார காலத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி  காலை 11 மணியளவில் வரும் சரண்யா என்ற ஆசிரியை பள்ளி மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது மீது   எங்கிருந்தோ வந்த கல் விழுந்தது.

Story image

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல்துறையில் புகார் எதுவும் தெரிவிக்காத நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளரான அந்த ஆசிரியையின் கணவர், வல்லம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் பள்ளிக்குள் நுழைந்து பிளஸ் 1 மாணவர்கள் 14 பேரை சந்தேகத்தின் பேரில் பள்ளி வளாகத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் சுமார் 4 மணி நேரம் மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். 

விசாரணையின் போது அந்த அறைக்குள் தலைமை ஆசிரியரையோ அல்லது வேறு எந்த ஆசிரியரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. 

இதையறிந்த அம்மாணவர்களின் பெற்றோர் மறுநாள் (ஆக.8) காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.  இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களை சமாதானம் செய்தார். 

ஆனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் மூடி மறைத்து விட்டனர். 

Story image

பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்

இந்த நிலையில்,  சம்பவம் தொடர்பாக  உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சிறார் நீதி ( பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினார். 

அவரது புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி  அறிக்கை அனுப்புமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், விசாரணை அறிக்கையை ஒருவார காலத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.