மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் வருமா? - சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 10:27 am IST

திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

சென்னையில் கடந்த 2015ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையடுத்து திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு முன்னெடுப்புகளின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் சமர்ப்பித்துள்ளார்.

Story image

இதன்படி, திருச்சியில் மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சமயபுரத்தில் இருந்து வயலூர் வரை 19 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களும், இரண்டாவது வழித்தடமாக துவாக்குடியில் இருந்து பஞ்சப்பூர் வரை 26 கி.மீ. தூரத்தில் 26 நிறுத்தங்கள் என இரு வழித்தடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் மொத்தம் 39.07 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 13 நிறுத்தங்களுடன் 12.39 கி.மீ. தூரத்திற்கு பேட்டையில் இருந்து சங்கனாபுரம் வரை, 12 நிறுத்தங்களுடன் 12.03 கி.மீ. தூரத்திற்கு பாளையங்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை, 15 நிறுத்தங்களுடன் 14.65 கி.மீ. தூரத்திற்கு சங்கர் நகரில் இருந்து வசந்த நகர் வரை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல சேலத்தில் 35.19 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்கள் அமைய வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதன்படி, கரபுரநாதர் கோயிலில் இருந்து அம்மாபேட்டை வழியாக அயோத்தியாபட்டினம் ரயில் நிலையம் வரை 17.16 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களுடன் முதல் வழித்தடமும், கருப்பூரில் இருந்து சேலம் ரயில் நிலையம் வழியாக நல்லிகாலப்பட்டி வரை 18.03 கி.மீ. தூரத்திற்கு 19 நிறுத்தங்களுடன் இரண்டாவது வழித்தடமும் அமைக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.