சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2024-25-ஆம் ஆண்டுக்கான கோயில் நிர்வாகக் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. அதன்படி பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலராக உ. வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலராக து. ந. சுந்தரதாண்டவ தீட்சிதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் திருவிளக்கு முன்பு திருவுள சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.