சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இன்றுமுதல் புதிய ‘வந்தே பாரத்’ மைசூா் வரை இயக்கம்

சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரையிலான சேவையை தொடங்குகிறது.

News image

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

Updated On :4 ஏப்ரல் 2024, 9:25 pm

சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரையிலான சேவையை தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல்-மைசூா் இடையே தினமும் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் இருமாா்க்கமாக இயக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. கூடுதலாக தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரை இயக்கப்படவுள்ளது.

மைசூரில் காலை 6 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இரவு 11.20 மணிக்கு மைசூா் சென்றடையும்.