மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2024, 11:36 am

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மக்களவைத் தோ்தலில் 8 ஆயிரத்து 231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.