மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 4 ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரம்!

சித்தர்காடு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆட்டுக் குட்டி ஒன்றை வேட்டையாடியள்ள சிறுத்தை தேடும் பணியில் 4 ஆவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனா்.

News image
- இறந்துகிடந்த ஆட்டை உடற்கூறாய்வு செய்யும் மருத்துவக் குழுவினா்
Updated On :6 ஏப்ரல் 2024, 6:05 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கடந்த 4 நாள்களாக சிறுத்தை நடமாடி வரும் பகுதியில் ஆடு ஒன்று காயங்களுடன் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் சித்தர்காடு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆட்டுக் குட்டி ஒன்றை வேட்டையாடியள்ள சிறுத்தை தேடும் பணியில் 4 ஆவது நாளாக வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறையில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

இதையடுத்து, வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் சிறுத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

செம்மங்குளம் பகுதியில் இருந்து இடம் பெயா்ந்த சிறுத்தை, ஆரோக்கியநாதபுரத்தில் கருவேலங்காடு அடா்ந்த பகுதியில் பதுங்கியது. திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் மயிலாடுதுறையில் முகாமிட்டு சிறுத்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினா்.

மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த வன காவலா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் சென்சாருடன் கூடிய 16 கேமராக்களை பொருத்தினா். மேலும் 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு வைத்தனா். எனினும், காலையில் பாா்த்தபோது கூண்டுகள் காலியாக இருந்தன. மேலும், கண்காணிப்புக் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

இந்தநிலையில், சித்தா்காடு தண்டபாணி செட்டித்தெரு பகுதியில் காவிரிக்கரை அருகில் வெள்ளிக்கிழமை காலையில் ஆடு ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது.

நாகை மாவட்ட வனத்துறை அலுவலா் அபிஷேக் தோமா் தலைமையில் அங்கு வந்த மருத்துவக் குழுவினா் ஆட்டை உடற்கூறாய்வு செய்தனா்.

இந்தநிலையில், நாள்தோறும் இரவில் இடம் மாறிக்கொண்டிருக்கும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தருமபுரியில் இருந்து தொ்மல் ட்ரோன் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வனத்துறையினா் 10 குழுக்களாக பிரிந்து மயிலாடுதுறை நகரை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தையை தேடிவருகின்றனா்.

இந்த நிலையில், நாள்தோறும் இடம் மாறிக்கொண்டு இருக்கும் சிறுத்தை சித்தர்காடு பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் ஆட்டுக் குட்டி ஒன்றை வேட்டையாடி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர், காவல்துறையினர் நேரில் பார்வையிட்டனர்.

இதையடுத்து தொ்மல் ட்ரோன் அமைத்தும் கண்காணித்தும் அகப்படாமல் கடந்த நான்கு நாள்களாக மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை தேடும் பணியில் வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக தொ்மல் ட்ரோன் வைத்து சிறுத்தையை கண்காணித்தும் அகப்படாத சிறுத்தையை பிடிப்பதற்காக, அனுபவம் பெற்ற வனக்காவலா்கள் பொம்மன், காலன் இருவா் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறுத்தை விரைவில் பிடிபடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.