நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகள் காலமானார்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் மகள் ராஜலட்சுமி காலமானார்
ராமலிங்கனார் மகள் ராஜலட்சுமி
ராமலிங்கனார் மகள் ராஜலட்சுமி

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் மூத்த மகள் ராஜலட்சுமி (91) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தேசபக்திப் பாடல்கள் மூலம் மக்களிடையே சுதந்திரப் போராட்டத்தை வளர்த்தவர்களில் ஒருவர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம். இவரது மகள் ராஜலட்சுமி சென்னையில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில், சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னாரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு; 98407-06227.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com