கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எடப்பாடு பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கெ தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது.
இபிஎஸ் பழைய கதைகளையே பேசி வருகிறார். மக்களை சந்திப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.
ஜூன் 4 ஆம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையிலிருந்து ஓட்டப்படும்.
ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதற்கு வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்னைகளை வேந்தர்கள் வெளிக்கொண்டு வருவார்கள் எனப் பேசினார்.