உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இபிஎஸ் ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள்? - அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று அண்ணாமலை பேசினார்.

News image
அண்ணாமலை (கோப்புப்படம்)
Updated On :11 ஏப்ரல் 2024, 8:31 am

DIN

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எடப்பாடு பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கெ தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது.

இபிஎஸ் பழைய கதைகளையே பேசி வருகிறார். மக்களை சந்திப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.

ஜூன் 4 ஆம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையிலிருந்து ஓட்டப்படும்.

ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதற்கு வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்னைகளை வேந்தர்கள் வெளிக்கொண்டு வருவார்கள் எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.