சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் திருச்சன்னூருடன் நிறுத்தப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதி பணிமனையில் ஏப்.16 முதல் ஏப்.23-ஆம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருப்பதி செல்லும் ரயில்கள் அதன் முந்தைய ரயில் நிறுத்தமான திருச்சனூருடன் நிறுத்தப்படும்.
சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு ரயில், காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் ஏப்.16 முதல் ஏப்.23-ஆம் தேதி வரை திருச்சனூருடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் திருப்பதியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருச்சனூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும்.
மேற்கண்ட தேதிகளில் அரக்கோணம் - திருப்பதி மெமு விரைவு ரயில் (எண்: 06753/06754) திருச்சனூருடனும், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (எண்: 16854/16853) காட்பாடியுடனும் நிறுத்தப்படும்.
இதுபோல், வியாசா்பாடி ஜூவா பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13, 14) பரமாரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13, 14) சென்னை கடற்கரைக்கு செல்வதற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் (மூா் மாா்க்கெட் வளாகம்) சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

