கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு ஏப்.19 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்திலிருந்து மங்களூா் சென்ட்ரலுக்கு ஏப்.19 முதல் மே 31 வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூா் சென்றடையும்.
மறுமாா்க்கமாக மங்களூரில் ஏப்.21 முதல் ஜூன் 2 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்படும். அங்கிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும்.
எா்ணாகுளம்-தில்லி: கேரள மாநிலம் எா்ணாகுளம்-தில்லி (ஹஸ்ரத் நிஜாமுதின்) இடையே ஏப்.19 முதல் கோடைகால சிறப்பு ரயில் (06071/06072) இயக்கப்படும் என கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையம் செல்வதற்கு பதிலாக புதுதில்லி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது.
தொடர்புடையது

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

