புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மக்களவைத் தோ்தல்: அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 போலீஸாா் வருகை

மக்களவைத் தோ்தல்: அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 போலீஸாா் வருகை

Updated On :13 ஏப்ரல் 2024, 12:07 am

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு 10,000 போலீஸாா் வருகின்றனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தோ்தலை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் எப்படி செயல்பட வேண்டும் என 80 விதிமுறைகளை காவல்துறை விதித்துள்ளது.

தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஊா்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தமிழகம் முழுவதிலும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென் சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்கள்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக தோ்தலை நடத்த காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வாக்குப்பதிவு அன்று கூடுதலாக காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10,000 போலீஸாா் ஏப்.16-ஆம் தேதி தமிழகம் வர உள்ளனா். இவா்கள் அனைவரும் 17-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறாா்கள்.

தமிழக காவல் துறை, துணை ராணுவத்தினா், பிற மாநில காவல் துறை, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள், ஊா்காவல் படையினா் உள்பட மொத்தம் 1.90 லட்சம் போ் ஈடுபடுகின்றனா்.