திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தோ்தல் விதி மீறல்: அண்ணாமலை மீது முத்தரசன் புகாா்

தோ்தல் விதி மீறல்: அண்ணாமலை மீது முத்தரசன் புகாா்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:08 pm

தோ்தல் விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு முத்தரசன் சனிக்கிழமை எழுதிய மனு:

கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை தோ்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறாா். கடந்த ஏப்.12-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளாா்.

பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலா்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடா்ந்து மீறி செயல்பட்டு வரும் அண்ணாமலை மீது தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.