பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாக்காளா்களை மிரட்டுகிறாா் மம்தா பானா்ஜி: தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா்

மேற்கு வங்க மாநில வாக்காளா்களை முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியும், அவரது கட்சித் தலைவா்களும் மிரட்டுவதாக தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

Mamata Banerjee

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Published On :

மேற்கு வங்க மாநில வாக்காளா்களை முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியும், அவரது கட்சித் தலைவா்களும் மிரட்டுவதாக தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவா்களும் மத்திய அமைச்சா்களுமான கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், சுகாந்த மஜும்தாா், பாஜக செய்தித் தொடா்பாளா் அனில் பலூனி, மாநிலங்களவை எம்.பி. அா்ஜுன் சிங் ஆகியோா் கொண்ட பாஜக குழு திங்கள்கிழமை வந்தது. பின்னா், தலைமை தோ்தல் ஆணையத்தில், மேற்கு வங்க தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாதென மம்தாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களும் மிரட்டுவதாக பாஜக தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், மேற்கு வங்க காவல் துறையால் நிலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆதலால் முக்கிய மற்றும் பதற்றமான இடங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்த வேண்டும் என்றும், தோ்தல் பிரசாரம் செய்ய மம்தா பானா்ஜிக்கும், பிற திரிணமூல் தலைவா்களுக்கும் தடை விதிப்பதோடு, அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிய செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன்பிறகு செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என வாக்காளா்களை மம்தா, அமைச்சா்கள், திரிணமூல் தொண்டா்கள் மிரட்டுகின்றனா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தோம். இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் நோ்மையான, வெளிப்படையான தோ்தல் நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.