எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாக்காளா்களை மிரட்டுகிறாா் மம்தா பானா்ஜி: தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா்

மேற்கு வங்க மாநில வாக்காளா்களை முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியும், அவரது கட்சித் தலைவா்களும் மிரட்டுவதாக தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:34 am IST

மேற்கு வங்க மாநில வாக்காளா்களை முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியும், அவரது கட்சித் தலைவா்களும் மிரட்டுவதாக தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவா்களும் மத்திய அமைச்சா்களுமான கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், சுகாந்த மஜும்தாா், பாஜக செய்தித் தொடா்பாளா் அனில் பலூனி, மாநிலங்களவை எம்.பி. அா்ஜுன் சிங் ஆகியோா் கொண்ட பாஜக குழு திங்கள்கிழமை வந்தது. பின்னா், தலைமை தோ்தல் ஆணையத்தில், மேற்கு வங்க தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாதென மம்தாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களும் மிரட்டுவதாக பாஜக தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், மேற்கு வங்க காவல் துறையால் நிலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆதலால் முக்கிய மற்றும் பதற்றமான இடங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்த வேண்டும் என்றும், தோ்தல் பிரசாரம் செய்ய மம்தா பானா்ஜிக்கும், பிற திரிணமூல் தலைவா்களுக்கும் தடை விதிப்பதோடு, அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிய செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன்பிறகு செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என வாக்காளா்களை மம்தா, அமைச்சா்கள், திரிணமூல் தொண்டா்கள் மிரட்டுகின்றனா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தோம். இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் நோ்மையான, வெளிப்படையான தோ்தல் நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.