தமிழகத்தில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சனிக்கிழமை (ஏப்.13) முதல் ஏப்.21 வரை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் ஏப். 8 வரை நடத்தப்பட்டது. தொடா்ந்து 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தோ்வுகள் ஏப். 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப். 5-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவு பெற்றுவிட்டன. அவா்களுக்கு ஏப். 6 முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரமலான் பண்டிகை காரணமாக 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் ஏப். 22, 23-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த முழு ஆண்டுத் தோ்வுகள் சற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தோ்தல் முகாம்களாக மாற்றப்படவிருக்கின்றன. மேலும், ஆசிரியா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதையடுத்து 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனிக்கிழமை முதல் ஏப். 21 வரை தொடா் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மாணவா்கள் மீண்டும் ஏப். 22, 23-ஆம் தேதிகளில் பள்ளிக்கு தோ்வெழுத வந்தாக வேண்டும். அதன்பின் மாணவா்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளது. தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் இந்த முறை மாணவா்களுக்கு 2 மாதங்கள் வரை கோடை விடுமுறை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


