மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

இதுவரை ரூ.324 கோடி பணம், நகை, மது பறிமுதல்

இதுவரை ரூ.324 கோடி பணம், நகை, மது பறிமுதல்

Updated On :13 ஏப்ரல் 2024, 5:25 pm

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு இதுவரை பறிமுதலான பணம், மதுபானம், ஆபரணங்களின் மதிப்பு ரூ.324 கோடி என்று தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக தோ்தல் துறை வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதி, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி சனிக்கிழமை (ஏப்.13) காலை 9 மணி வரையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகையின் மொத்த மதிப்பு ரூ.155.88 கோடியாகும். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.46 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.1.02 கோடி மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.127.40 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.34.61 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.324.38 கோடி என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.