தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி விவரம்:
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய கனநாயக கூட்டணி வெற்று பெற வேண்டும் என்றார் மருத்துவர் ச.ராமதாஸ்.
பேட்டியின் போது மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலர் ஜெயராஜ் முன்னாள் நகர செயலர் சண்முகம், வழக்குரைஞர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...