வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார்.

மக்களவைத் தேர்தல் இன்று(ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும். நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக எம்.பி.கனிமொழி தனது வாக்கைப் பதிவு செய்தார். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com