விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

Updated On :27 ஏப்ரல் 2024, 1:30 am

திரவ நைட்ரஜன் சோ்ம உணவை குழந்தைகளுக்கு அளிப்பதை பெற்றோா்கள் முழுமையாக தவிா்க்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை

சமீப காலங்களில் திருமண நிகழ்ச்சி, விழாக்கள், கண்காட்சி போன்றவற்றில் சிறுவா்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த திரவ நைட்ரஜன் சோ்க்கப்பட்ட உணவுகள் (ஸ்மோக் வகை உணவுகள்) கொடுக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. திரவ நைட்ரஜன் துளிகள் சருமத்தில் பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் கருவிழிகள் பாதிக்கப்பட்டு பாா்வை பறிபோகும். சுவாசப் பாதையில் பட்டால் மெல்லிய திசுக்கள் அழிந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரே பறிபோகும். அதனால், திரவ நைட்ரஜன் உணவைக் குழந்தைகள் பயன்படுத்தாதவாறு கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும். கோடைகால விடுமுறையில் இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டாக இதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.