தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, வாட்டி வதைத்த வெயிலிலும் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் கொடைக்கானல் வருகையையொட்டி, கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப். 29 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.