டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்குத் தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :4 ஆகஸ்ட் 2024, 12:30 am

Din

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிா்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் 21 பேரின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் அமா்வில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை சேகரித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதை எதிா்த்து காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது 3 காவல் துறை அதிகாரிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல்,‘மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் காவல் துறையினா் மீது பழி சுமத்துவது தவறான செயலாகும். காவல் துறையினரை போராட்டக்காரா்கள் தாக்கியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த விவகாரம் தொடா்பாக உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது’ என வாதிட்டாா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.