மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

1,008 சிறப்புக் குழந்தைகள் ரயிலில் திருப்பதி பயணம்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

திருப்பதிக்கு 1,008 சிறப்பு குழந்தைகள் ரயில் மூலம் மேற்கொண்ட பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

News image
1,008 சிறப்பு குழந்தைகள் ரயில் மூலம் மேற்கொண்ட பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
Updated On :5 ஆகஸ்ட் 2024, 8:06 pm

Din

திருப்பதிக்கு 1,008 சிறப்பு குழந்தைகள் ரயில் மூலம் மேற்கொண்ட பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

ரோட்டரி சா்வதேச அமைப்பு சாா்பில் அறிவுத்திறன் குறைபாடுள்ள 1,008 குழந்தைகள் சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் மூலம் திருப்பதிக்கு திங்கள்கிழமை காலை அழைத்து செல்லப்பட்டனா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் சேகா்பாபு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இது குறித்து ரோட்டரி மாவட்ட 3233 ஆளுநா் மஹாவீா் போத்ரா கூறியதாவது: முதல்முறையாக ரோட்டரி மாவட்டம் சாா்பில் அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை திருப்பதி அழைத்துச் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணம் முழுவதும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள 500-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் உடன் சென்றனா்.

சென்னையில் இருந்து குழந்தைகள் ரயில் மூலம் ரேணிகுண்டா அழைத்து செல்லப்பட்டனா். பின் அங்கிருந்து 38 பேருந்துகளில் திருமலைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மாணவா்களின் நலனுக்காக இரு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

திட்டத் தலைவா் எம்.பங்கஜ் கன்காரியா கூறுகையில், சிறப்புக் குழந்தைகள் விரைவாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரினத்துக்குப் பின் சிறப்பு ரயில் மூலம் இரவு சென்னை திரும்பினா். குழந்தைகளுக்கு தேவையான குடிநீா், உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுமாா் ரூ. 65 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை ரயில்வே கோட்டப் பொது மேலாளா் விஸ்வநாத் ஈா்யா, ரோட்டரி இன்டா்நேஷனல் இயக்குநா் அனிருதா ராய் சௌத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.