டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!

நாடு முழுவதும் 1,037 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு..

News image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - Din

Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:20 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில், நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை, மத்திய துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,037 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தமிழகத்தை சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

விருதுபெறும் அதிகாரிகள்

விருதுபெறும் அதிகாரிகள் - PIB

விருதுபெறும் ஊர்க்காவல் படையினர்

விருதுபெறும் ஊர்க்காவல் படையினர் - PIB

இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.