கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள்: காவல்துறை எச்சரிக்கை!

நெல்லை மாநகரப் பேருந்துகளில் சாதி பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம் - DIN

Updated On :16 ஆகஸ்ட் 2024, 8:08 am

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான தாக்குதல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன்இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்

அதில், பேருந்துகளில் சாதி ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பப் கூடாது என்றும் மீறினால் ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளில் ஏதேனும் சிறியதாகபிரச்னைகள் இருந்தாலும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.