புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பற்றி...

News image
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்- Din
Updated On :2 டிசம்பர் 2024, 8:01 am

DIN

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்தவுடன், காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவிழந்து மெதுவாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்தது.

இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் உள்மாவட்டங்கள் நோக்கி நகா்ந்து டிச. 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.