விராலிமலையில் ஒரே இரவில் 85 மி.மீ. மழைப்பொழிவு.!

விராலிமலை, இலுப்பூரில் ஒரே இரவில் 105 மில்லி மீட்டர் மழை
விராலிமலையில் ஒரே இரவில் 85 மி.மீ. மழைப்பொழிவு.!
PTI
Published on
Updated on
1 min read

விராலிமலை: விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒரே இரவில் 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிலும்குறிப்பாக விராலிமலையில் 85 மில்லி மீட்டர், இலுப்பூரில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. ஃபென்ஜால் புயல் தாக்கத்தின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களும் விவசாயிகளும் இரவு திடீரென்று பெய்த இந்த மழைப்பொழிவால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com