
விராலிமலை: விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒரே இரவில் 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிலும்குறிப்பாக விராலிமலையில் 85 மில்லி மீட்டர், இலுப்பூரில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. ஃபென்ஜால் புயல் தாக்கத்தின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களும் விவசாயிகளும் இரவு திடீரென்று பெய்த இந்த மழைப்பொழிவால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.