எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 2 படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, படகுகளை பறிமுதல் செய்து 14 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை தலைமன்னார் கடற்படை தளத்தில் வைத்து 14 மீனவர்களையும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு!! இன்றுமுதல் அமல்
கரைக்கு திரும்பிய பிற மீனவர்கள், இலங்கை கடற்படையினர் படகுகளை சேதப்படுத்தியதாகவும், வலைகளை கிழித்து கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை படையினர் கைது செய்து வரும் நிலையில், இதுவரை இலங்கை சிறையில் 141 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



