டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பு: அதிகாரிகள் ஆய்வு!

மேட்டூர் அணை விரைவில் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

News image
மேட்டூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு.
Updated On :6 டிசம்பர் 2024, 9:02 am

DIN

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நீர்வரத்து கணிசமாக இருக்கும் நிலையில் அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர், பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Story image

இதன் காரணமாக 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் நீடித்தால் எட்டு நாட்களில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று மேட்டூர் அணை அணையின் வலது கரை, இடது கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு சுரங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

நீர்வளத் துறையின் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம்,உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் ஆணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினார்.

அணை நிரம்பினால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அணையின் வலது கரையிலும் இடது கரையிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் உபரி நீரை திறக்க தயார் நிலையில் குழுக்களை நிறுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் படர்ந்து வரும் பச்சை நிற படலங்களை நிரந்தரமாக தடுக்கவும் மேட்டூர் அணை பூங்காவை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.