கார்த்திகை தீபம் - 4,089 சிறப்புப் பேருந்துகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பேருந்துகள்(கோப்புப்படம்)
பேருந்துகள்(கோப்புப்படம்)
Updated on
1 min read

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

முதல்வரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை: உதயநிதி

மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசிதிக்காக 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com