மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கபபட்டன.

News image
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள பீமநாயக்கன் தோப்பு நகராட்சிப் பள்ளிக்குச் செல்லும் மாணவ - மாணவிகள்.
Updated On :9 டிசம்பர் 2024, 5:06 am

DIN

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கபபட்டன.

வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கிய மழை, புயல் கரையைக் கடந்த பின்னரும் டிசம்பர் 1-ஆம் தேதி இரவு பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த பெரும்மழையால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.

பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். குடியிருப்புகள் சேதம், நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நாசமடைந்த நிலையில், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

புயல் எச்சரிக்கையாக நவம்பர் 29-ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. புயல் கரையைக் கடந்த பின்னர் மழை கொட்டித் தீர்த்த மழையால் பள்ளிகள் முன்பு மழைநீர் தேங்கியது. மழை நின்ற பின்னரும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வந்தன.

Story image

இதன் காரணமாக கடந்த 10 நாள்கள் மூடப்பட்டிருந்தன. அனைத்துப் பணிகள் முடிந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மேல்நிலைப் பள்ளி உள்பட 7 பள்ளிகளைத் தவிர மாவட்டத்தில் 1288 அரசுப் பள்ளிகள், 501 தனியார் பள்ளிகள் 10 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

மழையால் புத்தகங்களை இழந்த மாணவ - மாணவிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.