அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
முதல்வர் மு.க. ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.
"அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என முதல்வர் அறிவித்துள்ளார்.
நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!
#திராவிà®à®®à®¾à®à®²à¯ à®à®°à®à®¿à®©à¯ மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ @mkstalin à®à®µà®°à¯à®à®³à¯ நமத௠à®à®°à®à¯à®ªà¯ பளà¯à®³à®¿ மாணவரà¯à®à®³à®¿à®©à¯ à®à®²à¯à®µà®¿à®à¯à®à®¾à® மறà¯à®±à¯à®®à¯à®°à¯ à®®à®à®¤à¯à®¤à®¾à®© à®à®°à®à®¾à®£à¯à®¯à¯ à®à®©à¯à®±à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®°à¯.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 23, 2024
"à®à®°à®à¯à®ªà¯ பளà¯à®³à®¿à®¯à®¿à®²à¯ 6 à®®à¯à®¤à®²à¯ 12à®à®®à¯ வà®à¯à®ªà¯à®ªà¯ வர௠பயினà¯à®±à¯ நம௠நாà®à¯à®à®¿à®²à¯ à®à¯à®¯à®²à¯à®ªà®à¯à®à¯ வரà¯à®®à¯ தலà¯à®à®¿à®±à®¨à¯à®¤ à®à®¯à®°à¯à®à®²à¯à®µà®¿ நிறà¯à®µà®©à®à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®°à¯à®®à¯â¦ pic.twitter.com/BXYcA5UJLs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவா் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

எஸ்பிஐ சொத்து மேலாண்மை ஐபிஓ: 2.77 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

தொகுதி மக்கள் நலன்சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும்: எஸ். காமராஜ் எம்எல்ஏ







