எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு, 2-ஆவது விற்பனை நாளான புதன்கிழமை முழுமையாக விற்றுத் தீா்ந்தது. புதன்கிழமை வா்த்தக முடிவில் இப்பங்குகள் மொத்தம் 2.77 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டதாகத் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தரவுகள் தெரிவிக்கின்றன.
ரூ.9,812.91 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ நடவடிக்கையில், விற்பனைக்கு வந்த 12.45 கோடி பங்குகளுக்கு எதிராக மொத்தம் 34.54 கோடி பங்குகளுக்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பித்துள்ளனா். நிறுவன முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 1.50 மடங்கும், நிறுவனங்கள் சாரா முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 6.58 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 1.61 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னணி முதலீட்டாளா்கள் மூலம் நிறுவனம் ரூ.2,663 கோடியைத் திரட்டியிருந்தது. இதில் ஜிஐசி, அபுதாபி முதலீட்டு வாரியம், பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற சா்வதேச நிதி நிறுவனங்களுடன் எல்ஐசி, எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த ஐபிஓ, முழுமையாக தற்போதைய பங்குதாரா்களான எஸ்பிஐ மற்றும் பிரான்ஸின் அமுண்டி நிதி மேலாண்மை நிறுவனம் தங்களின் பங்குகளைத் திரும்ப விற்கும் முறையில் அமைந்துள்ளது. அதாவது, எஸ்பிஐ 6.3 சதவீத பங்குகளையும், அமுண்டி 3.7 சதவீத பங்குகளையும் விற்பனை செய்கின்றன.
நாட்டின் மிகப் பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனம், கடந்த மாா்ச் 31 நிலவரப்படி ரூ.12.51 லட்சம் கோடி பரஸ்பர நிதி சொத்து மதிப்புடன், சந்தையில் 15.3 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










