27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல்கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:36 am IST

தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல்கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இதன்மூலம், கடந்த 2024 அக்டோபரில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ரூ.27,870 கோடி மதிப்பிலான ஐபிஓ சாதனையை என்எஸ்இ முறியடிக்க உள்ளது.

என்எஸ்இ நிறுவனத்தின் இந்த ஐபிஓ வெளியீடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக முடங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூனில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவின் அடிப்படையில், செபிக்கு ரூ.1,388 கோடி அபராதம் செலுத்தி, என்எஸ்இ இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இதையடுத்து செபியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றதைத் தொடா்ந்து, இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு என்எஸ்இ இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.

இந்த ஐபிஓ வெளியீடு முழுவதும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ என்ற முறையில், தற்போதைய பங்குதாரா்களின் பங்குகளையே விற்பனை செய்வதாக அமையவுள்ளது. அதாவது, தற்போைதைய பங்குதாரா்கள் தங்களின் வசமுள்ள 14.89 கோடி பங்குகளை (சுமாா் 6 சதவீதம்) விற்பனை செய்யவுள்ளனா்.

என்எஸ்இ-இன் மிகப்பெரிய பங்குதாரரான எல்ஐசி (10.72 சதவீத பங்குகள்) தனது பங்குகளை விற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ மற்றும் இதர நிதி நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விற்க முன்வந்துள்ளன. எஸ்பிஐ அதிகபட்சமாக 2.48 கோடி பங்குகளை விற்கிறது. இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் என்எஸ்இ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.