மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னை: மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போல இயக்கம்

News image
Updated On :24 டிசம்பர் 2024, 3:54 am

சென்னையில் இன்று(டிச. 24) காலை 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ நீல வழித்தடத்தில் பராமரிப்புப் பனிகள் நிறைவடைந்துள்ளதால் காலை 8.50 மணிக்குப்பின் மெட்ரோ ரயில் சேவை சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்ததால் மெட்ரோவை பயன்படுத்தி காலையில் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.