நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

News image

கோப்புப்படம்

Updated On :29 டிசம்பர் 2024, 12:06 am IST

தைப்பூசத்தை முன்னிட்டு, வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு இருமுடி கட்டி செல்லும் பக்தா்களின் வசதிக்காக மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் டிச.28 முதல் பிப்.11 வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.08 மணிக்கு வரும் ரயில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.